வியாழன், 25 அக்டோபர், 2018

அகத்தியர் சூடாமணி கயிறு சூத்திரம்: மின்னூல்



அகத்தியர் இயற்றிய பற்பல நூல்களின் வரிசையில் "சூடாமணி கயிறு சூத்திரம்" எனும் இந்நூல் சற்றே வித்தியாசமானதும், ஆச்சரியமான தகவல்களைக் கொண்டதுமாகும்.

அதாவது பெதுவாகச் சித்தர் நூல்களில் நோய்களை அறிய நாடி பார்த்தும், எட்டுவித பரிசோதனைகளைச் செய்தும் ஒருவருக்கு வந்துள்ள நோய்களை அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்நூலில் சற்றே வித்தியாசமாகச் சாதாரண சிறிய கயிறினை கொண்டு ஒருவருக்கு வந்துள்ள நோய்களையும், இனி வரப்போகும் நோய்களையும் அறியலாம்.

அது எவ்வாறென்றால் ஒருவரின் கை மணிக்கட்டு பகுதியிலிருந்து நான்கு விரற்கடை தள்ளிக் கயிறு கொண்டு அளந்து பார்த்துக் கிடைக்கும் நீளத்தை அவரவர் விரற்கடை அளவாக அளக்க கயிற்றின் நீளம் முறையே நான்கு முதல் பதினொன்று விரற்கடை அளவு வரையிலும் இருக்கும். அந்த அளவுகளைக் கொண்டு ஒருவருக்கு உள்ள நோயைக் கண்டறியலாம்.

இந்த மணிக்கடை நூலை மின்னூலாகப் பெறுவதற்க்கு கீழே சொடுக்கி எனது தனிப்பட்ட புலனத்தில் நூலை பெற்றுக் கொள்ளலாம். (Google Drive மூலம் நூலை பெறுவதில் சில சிக்கல்கள் தொடர்ந்து இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நூல் கேட்டு கிடைக்காதவர்கள் எமது புலனத்தை தொடர்பு கொண்டு நூலை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.) இந்த நூலில் உள்ள பாடல்கள் அனைவருக்கும் எளிதில் புரியும்வண்ணம் இருப்பதால் அந்தப் பாடல்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக