திங்கள், 29 அக்டோபர், 2018

சுத்தி முறைகள் (பால் மற்றும் நெய் வகைகள்)

பால் வகைகள்:

1) பசும்பால் - கன்றுக்கு ஊட்டியபின் அதன் வாய்பட்ட வேகம் தணியப் பசுவின் மடியை சுத்த நீரால் கழுவி கறந்து, நுரை அடங்கியபின் வடிகட்டுக.


2) வெள்ளாட்டு பால் - இதனை 7 முறை முரட்டு துணியால் வடிகட்டுக.


3) தயிர் - தோய்ந்த தயிரிலிருந்து வரும் நீரை பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்.


4) மோர் - சிறிது சோற்றுப்பு சேர்த்த பின்பு உபயோகிக்கவும்.


5) முலைப்பால் - இதில் சிறிது தும்பை பூவை போட்டு கால் நாழிகை சென்ற பின் வடிகட்டவும். அல்லது ஒரு வெள்ளி கிண்ணத்தை நெருப்பிலிட்டு சூடேற்றி அதில் பாலைவிட்டு உடனே வடிகட்டவும்.




நெய் வகைகள் சுத்தி:

1) வெண்ணெய் - சுத்தமான நீரில் புளிப்பற பிசைந்து கழுவி எடுக்கவும்.


2) நெய் - வெண்ணெயை பாத்திரத்திலிட்டு அடுப்பேற்றி அதிலுள்ள நீர் சுண்ட, நெய் காந்தாமல் காய்ச்சி வடிகட்டவும்.


3) வாதுமை நெய் - இதனை படிக பாத்திரத்தில் நிரைத்து. அரைபாகம் மறைய மணலிற் புதைத்து 2 சாமம் இரவியில் வைத்து அடிவண்டல் கலங்காமல் தெளிவை மாத்திரம் பஞ்சினால் தோய்த்து மறு குப்பியில் பிழிந்து வடிகட்டுக.


4) ஆமணக்கு நெய் - குப்பியில் வைத்து கால்குப்பி மறையும்படி மணலில் புதைத்து 2 நாள் ரவிபுடம் வைத்து தெளிவை வடிகட்டுக. இவ்வாறே மற்ற எண்ணெய்களையும் சுத்தி செய்யவும்.


5) புன்கின் நெய் - இந்த நெய்க்கு சமமாக இதன் பாலை விட்டுக் காய்ச்சி வடித்துக் கொள்க.


6) தெங்கின் நெய் - இந்த நெய்க்கு சமமாக இதன் பாலைவிட்டுக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.


7) இலுப்பை நெய் - எலுத்தாணிப்பூண்டு கஷாயத்தை இதற்கு சமமாக கூட்டி காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.



8) வேம்பு நெய் - வேம்பாடம்பட்டையை இடித்து கஷாயம் வைத்து இதற்கு சமமாக கூட்டி எரித்தெடுத்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக