முந்தைய பதிவுகளில் கூறியது போலச் சித்த மருத்துவத்தில் உலோகங்கள், பாடாணங்கள், உபரசங்கள், இலவண உப்புகள், கடைச் சரக்குகள், மூலிகைகள் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. இவ்வாறு பயன்படும் ஒவ்வொரு பொருளிலும் குற்றங்களும் (தோஷங்கள்), மருத்துவத்திற்கு உதவாத மற்றும் நோயாளிக்கு ஊறு செய்யும் நஞ்சு பாகங்களும் உள்ளது. அதுபோல ஒவ்வொரு மருந்து சரக்கிற்கும் அதன் மருத்துவ குணத்தை கெடுக்கும் சத்ரு சரக்குகளும், அதனதன் குணத்தை அதிகப்படுத்தும் மித்ரு சரக்குகளும் உள்ளன.
மருந்துப் பொருட்களின் விபரம்:
காரசாரம் (உப்புகள்):
நமது சித்த மருத்துவத்தில் 25 வகையான உப்புகள் மருந்தாகப் பயன்படுகிறது. இதில் 10 வகை இயற்கை இலவணம் (உப்புகள்), மீதமுள்ள 15 வகையானவை செயற்கை இலவணங்கள் (உப்புகள்).
மருந்துப் பொருட்களின் விபரம்:
- உலோகங்கள் - 11
- லவண உப்புகள் - 25
- பாஷாணங்கள் - 64
- கடைச் சரக்குகள் - 64
- உபரசங்கள் - 120
- மூலிகைகள் - 1008
- தங்கம்
- வெள்ளி
- செம்பு
- நாகம் (துத்தநாகம்)
- எஃகு
- வெண்கலம்
- தரா
- பித்தளை
- இரும்பு
- வெள்வங்கம்
- கருவங்கம்
காரசாரம் (உப்புகள்):
நமது சித்த மருத்துவத்தில் 25 வகையான உப்புகள் மருந்தாகப் பயன்படுகிறது. இதில் 10 வகை இயற்கை இலவணம் (உப்புகள்), மீதமுள்ள 15 வகையானவை செயற்கை இலவணங்கள் (உப்புகள்).
- வழலை
- பூநீறு
- நவசாரம்
- எவச்சாரம்
- கெந்தியுப்பு
- வளையலுப்பு
- வெங்காரம்
- ஏகம்பச்சாரம்
- அமுரியுப்பு
- பச்சை கற்பூரம்
- கற்பூரம்
- சத்திசாரம்
- வெடியுப்பு
- மீனம்பர்
- பொன்னம்பர்
- சவுட்டுப்பு
- திலாலவணம்
- பிடாலவணம்
- இந்துப்பு
- சிந்துப்பு
- கல்லுப்பு
- காசிச்சாரம்
- அட்டுப்பு
- சீனம்
- கடல்நுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக