சித்த மருத்துவத்தில் பயன்படுகின்ற மருந்துகளைப் பொதுவாக இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
இவற்றில் இன்று பெரும்பாலான மருத்துவ முறைகள் புழக்கத்தில் இல்லை. அல்லது அந்த முறைகள் மாற்று மருத்துவ முறைகளில் கையாளப்படுகின்றன.
மருந்து வகைகள்:
1) உள் மருந்துகள்:
உள்ளுக்கு கொடுக்கும் மருந்துகள் உள் மருந்துகள் எனப்படும். இவைகள் தயாரிக்கப்படும் முறையைப் பொருத்து பெயர் பெற்றுள்ளன. இவை முப்பத்தி இரண்டு வகைப்படும்.
(1) சாறு:
மருந்துப் பொருட்களை நீர்விட்டு அரைத்து எடுக்கக் கிடைப்பது. 3 மணி நேரம்.
(2) சுரசம்:
மருந்துப் பொருட்களை நீர்விட்டு அரைத்துப் பிழிந்து கொதிக்க வைத்துக் கிடைப்பது. 3 மணி நேரம்.
(3) குடிநீர்:
மருத்துப் பொருட்களை அரைத்து நீர்விட்டு சுண்டக் காய்ச்சி கிடைப்பது. இது கஷாயம், கியாழம் எனவும் அழைக்கப்படும். 3 மணி நேரம்.
(4) கற்கம்:
ஈரமான அல்லது உலர்ந்த சரக்குகளைத் தூய்த்து இரும்புத் தூள் அல்லது இரும்பு சிட்டத்தூளை சில இலைகளுடன் சேர்ந்து கல்லோடு கல்லாக அரைப்பது. 3 மணி நேரம்.
(5) உட்கலி:
மாவுப்பொருட்களில் வெல்லம் சேர்த்து நெய்யூற்றி களிம்பு பதத்தில் கிண்டி எடுப்பதாகவும். களிம்பு பதம் என்பது ஒட்டாத பதம். 3 மணி நேரம்.
(6) அடை:
மாவுப் பொருட்களுடன் சில இலைகளைச் சேர்த்து அடுப்பேற்றி கொஞ்சங் கொஞ்சமாய் நெய் தடவி மாவை அடையாகத் தட்டி வெந்தபின் எடுப்பது. 3 மணி நேரம்.
(7) தூள் (சூரணம்):
ஈரமான மருந்துச் சரக்குகளை உலர்த்தியும், உலர்ந்தவற்றை சுத்தம் செய்தும். வறுக்க வேண்டியவற்றை வறுத்தும், மற்றவற்றை அப்படியே தனித்தனியாக இடித்துச் சலித்து எடுக்கக் கிடைப்பது. (சலித்தல் என்பது மெல்லிய வெள்ளை துணியால் மிக நுண்ணிய தூளாகச் சலிப்பது. இது வஸ்திரகாயம் எனப்படும்.) 3 நாட்கள்.
(8) பிட்டு:
தூளை சுத்தி செய்வது போல் மருந்து சரக்குகளைப் பொடியாக்கி பால் அல்லது தண்ணீரை பயன்படுத்தி ஆவியில் அவித்து எடுப்பது. 3 மாதம்.
(9) வடகம்:
மருந்து சரக்குகளைத் தூளாக்கி நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தோடு சேர்த்து அதை உரலில் இட்டு இடித்துச் சிறிதாக உருட்டி எடுப்பதாகும். 3 மாதம்.
(10) வெண்ணெய்:
மருந்து சரக்குகளைத் தூளாக்கி இரும்பு கரண்டியில் தூளின் எடைக்கு இருமடங்கு பசுவின் நெய் சேர்த்து அடுப்பிலேற்றி நெய் உருகிக் கலந்து உடன் தண்ணீர் உள்ள மண் சட்டியில் ஊற்றி மத்தால் கடைய கிடைப்பது. 3 மாதம்.
(11) மணப்பாகு:
சரக்குகள், வேர்கள், பூக்கள், பழங்கள், போன்றவற்றை குடிநீர் அல்லது சாறு பிழிந்து அதனுள் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து மணம் வரும் வரை காய்ச்சி பின் இறக்கி வைத்து ஆறிய பின் எடுப்பது. 6 மாதம்.
(12) நெய்:
இலைச்சாறு, கிழங்குச்சாறு, கற்கம், குடிநீர் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ சேர்த்து பசுவின் நெய்யோடு கலந்து அடுப்பேற்றி காய்ச்ச கிடைப்பது. 6 மாதம்.
(13) இரசாயணம்:
மருந்து சரக்குகளைத் தூளாக்கி அவற்றோடு சர்க்கரை மற்றும் நெய் சமனெடை சேர்த்து குழம்பு நிலையில் எடுப்பது. 6 மாதம்.
(14) இளகம் (லேகியம்):
மருத்துவக் குடிநீர் அல்லது மூலிகைச் சாறோடு சர்க்கரை சேர்த்து அடுப்பேற்றி சிறுதீயாகச் சுண்ட வைத்து மணம் வரும் நேரத்தில் தேன் அல்லது நெய் போன்றவற்றை கலந்து கிளறக் கிடைப்பது. 6 மாதம்.
(15) நெய் (கிருதம்):
விதை, பட்டை போன்றவற்றை நன்றாக உலர்த்தி பின்பு செக்கிலிட்டு ஆட்டிப் பெறப்படுவது. இது தைலம் எனவும் அழைக்கப்படும். ஒரு வருடம்.
(16) மாத்திரை:
சிறு சரக்குகளைச் சேர்த்து மூலிகை இலைச்சாறு அல்லது குடிநீர் கொண்டு அரைத்துப் பல அளவுகளில் உருட்டக் கிடைப்பது. ஒரு வருடம்.
(17) கடுகு:
மருந்துச் சரக்குகளை நெய் முதலியவற்றுடன் காய்ச்சி திரண்டு வரும்போது கடுகு பதத்தில் எடுக்கப்படுவது ஆகும். (கடுகு பதம் என்பது பாகுக்கு அடுத்த இறுகக்கூடிய நிலையாகும்.). ஒரு வருடம்.
(18) பக்குவம் (பதம்):
மருந்துகளைப் பக்கவப்படுத்த பொடித்தல், ஊற வைத்தல் போன்ற செயல்களைச் செய்வது. ஒரு வருடம்.
(19) தேனூறல்:
இஞ்சி, நெல்லிக்காய். கடுக்காய் முதலியவற்றை நன்றாகக் கழுவி ஊசியால் பல துளையிட்டு தேன் அல்லது சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுப்பது. ஒரு வருடம்.
(20) தீநீர்:
சரக்குகளைத் தண்ணீர் உள்ள சட்டியிலிட்டு அடுப்பிலிருந்து இறக்குவதாகும். ஒரு வருடம்.
(21) மெழுகு:
சரக்குகளுடன் சாறு அல்லது நெய் போன்றவற்றை சேர்த்து அரைத்து மெழுகு பதத்தில் காய்ச்சி எடுப்பதாகும். 5 வருடங்கள்.
(22) குழம்பு:
சாறுகள், சர்க்கரை, மருந்துப் பொடிகள் முதலியவற்றை காய்ச்சி குழகுழப்பான பக்குவத்தில் எடுப்பது. இதில் இரசாயணம் போல நெய் சேராது. 5 ஆண்டுகள்.
(23) பதங்கம்:
பாதரசம் அல்லது இரசம் கலந்த பொருட்களைச் செங்கல் தூள், உப்பு ஆகியவற்றிற்கு இடையில் வைத்துச் சீலைமண் செய்து மேல் சட்டியில் படிந்து இருப்பதை வழித்தெடுப்பது பதங்கம் ஆகும். 10 வருடங்கள்.
(24) செந்தூரம்:
உலோகம், பாடாணம் முதலியவற்றை இலைச்சாறு, புகைநீர், செயநீர் முதலியவற்றைக் கொண்டு புடம் போடக் கிடைப்பது. இது செந்நிறமாக இருக்கும்.75 வருடங்கள்.
(25) பற்பம் (பஸ்பம்):
உலோகம், பாடாணம் முதலியவற்றை இலைச்சாறு, புகைநீர், செயநீர் முதலியவற்றைக் கொண்டு புடம்போட்டு நீற்றக் கிடைப்பது. இது வெண்ணிறமாக இருக்கும். 100 வருடங்கள்.
(26) கட்டு:
பாடாணங்களைச் சுருக்குக் கொடுத்துப் பற்பம், செந்தூரம் போன்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து மாத்துரையாகச் செய்வது. 100 வருடங்கள்.
(27) உருக்கு:
பாடாணம், உலோகம், இவற்றுடன் நட்பு, பகை பொருட்களைக் கூட்டி எரித்து எடுப்பது. 100 வருடங்கள்.
(28) களங்கு:
ரசம், பாடாணம் போன்ற மருந்துகளை மூலிகை, செயநீர், புகைநீர் முதலியவற்றால் சுருக்கு கொடுத்து, புடமிட்டு மணியாக்கி தங்கம், நாகம் சேர்த்து கூட்டி எடுப்பது. 100 வருடங்கள்.
(29) சுண்ணம்:
ரசம், பாடாணம், உலோகம் இவைகளை தனியாகவோ, கலந்தோ மூலிகை, செயநீர், புகைநீர் இவற்றில் அரைத்துச் சீலைமண் செய்து நெருப்பால் ஊதி எடுப்பது. 500 வருடங்கள்.
(30) கற்பம்:
மூலிகை, உலோகம், உபரசங்கள் போன்ற பலவற்றை பக்குவத்துடன் செய்வது. 1000 வருடங்களுக்கும் மேல்.
(31) சத்து:
காந்தம், இரும்புத்தூள் முதலியவற்றுடன் பல பாடாணங்களை சேர்த்து அரைத்து ஊதி ரசம், கந்தகம், தங்கம் சேர்த்து எரித்து எடுப்பது. 1000 வருடங்களுக்கு மேல்.
(32) குருகுளிகை:
வாலை இரசத்தை சில சரக்குகளால் கட்டி மணியால் செய்து எடுத்துக் கொள்வது. 1000 வருடங்களுக்கு மேல்.
- அக மருத்துவம்
- புற மருத்துவம்
இவற்றில் இன்று பெரும்பாலான மருத்துவ முறைகள் புழக்கத்தில் இல்லை. அல்லது அந்த முறைகள் மாற்று மருத்துவ முறைகளில் கையாளப்படுகின்றன.
மருந்து வகைகள்:
- மூலிகையின் இலையை இடித்துப் பிழிந்தால் "சாறு"
- சாறை சூடுபடுத்தி பயன்படுத்தினால் "சுரசம்"
- இலையைச் சிதைத்து தண்ணீரில் போட்டுக் குடித்தால் "ஊறல் நீர்"
- மூலிகையை உலர்த்தி பொடி செய்து பயன்படுத்தினால் "சூரணம்"
- சூரணத்தை நெய், தேன், சர்க்கரை பாகு கலந்து கிளறினால் "லேகியம்"
- மூலிகையை நீரில் போட்டு வடிகட்டி வெல்லம், நெய், தேன் கலந்து பாகு போலக் காய்ச்சினால் "மணப்பாகு"
- மூலிகை இலையுடன் நீர்விட்டு அரைத்து பசையாகச் செய்தால் "கல்கம்"
- மூலிகையுடன் நீர் சேர்த்து காய்ச்சினால் "கியாழம்"
- மூலிகையுடன் பால், எண்ணெய் சேர்த்து காய்ச்சினால் "தைலம்"
- மூலிகையை இடித்து நீர்விட்டு காய்ச்சினால் "குடிநீர்"
- மூலிகையுடன் சர்க்கரை, வெல்லம், தேன் சேர்த்து களி போலக் கிளறினால் "உட்களி"
- மூலிகை பொடியைப் பாலில் அவித்து எடுத்தால் "பிட்டு"
- மூலிகை பிட்டை உருண்டையாக உருட்டுவது "வடகம்"
- மூலிகை பொடியைப் பால், நெய், வெண்ணெய், வெல்லம் சேர்த்து இரும்பு கரண்டியில் எரித்து எடுப்பது "வெண்ணெய்"
- மூலிகைகயை புடமிட்டு எரித்துப் பொடியாக்கினால் "பற்பம்" (பெரும்பாலும் வெந்நிறமாகவோ அல்லது வெளிர் பழுப்பு நிறமாகவோ இருக்கும்)
- அதுவே பற்பம் சிவந்து காணப்பட்டால் "செந்தூரம்"
- பற்பம் சுண்ணாம்பு போல வெளுத்துக் காணப்பட்டால் "சுண்ணம்"
- மூலிகையைப் புடமிட்டு எரித்து மேல் சட்டியில் ஒட்டி இருப்பதை எடுப்பது "பதங்கம்"
- பொடியாக்குதல்
- சுண்டி நீராக்குதல்
- கத்தியால் அறுத்தல்
- களி போலக் கிண்டுதல்
- மருந்துகளைப் பொடித்தல்
- பசை போன்று அரைத்தல்
- மையாக்கி கண்ணிலிடுதல்
- பொடியாக்கி மூக்கிலிடுதல்
- துணியில் மருந்தைத் தடவி போடுவதும்
- சிலாகையால் குத்தி சீழ், நிணநீர் எடுப்பதும்
- முறிந்த எலும்பைக் கூட்ட கொம்பு கட்டுவதும்
- குழாய்மூலம் குருதியை வெளிப்படுத்துவதும்
- பெருந்தூளாக்கி சூடிட்டு ஒத்தடம் பண்ணியதும்
- மருந்து தூளை நோயாளின் காதில் ஊதும் முறையும்
- மருந்துக் கலவையை நெருப்பிலிட்டு கிளம்பும் புகையை பிடித்தல்
1) உள் மருந்துகள்:
உள்ளுக்கு கொடுக்கும் மருந்துகள் உள் மருந்துகள் எனப்படும். இவைகள் தயாரிக்கப்படும் முறையைப் பொருத்து பெயர் பெற்றுள்ளன. இவை முப்பத்தி இரண்டு வகைப்படும்.
(1) சாறு:
மருந்துப் பொருட்களை நீர்விட்டு அரைத்து எடுக்கக் கிடைப்பது. 3 மணி நேரம்.
(2) சுரசம்:
மருந்துப் பொருட்களை நீர்விட்டு அரைத்துப் பிழிந்து கொதிக்க வைத்துக் கிடைப்பது. 3 மணி நேரம்.
(3) குடிநீர்:
மருத்துப் பொருட்களை அரைத்து நீர்விட்டு சுண்டக் காய்ச்சி கிடைப்பது. இது கஷாயம், கியாழம் எனவும் அழைக்கப்படும். 3 மணி நேரம்.
(4) கற்கம்:
ஈரமான அல்லது உலர்ந்த சரக்குகளைத் தூய்த்து இரும்புத் தூள் அல்லது இரும்பு சிட்டத்தூளை சில இலைகளுடன் சேர்ந்து கல்லோடு கல்லாக அரைப்பது. 3 மணி நேரம்.
(5) உட்கலி:
மாவுப்பொருட்களில் வெல்லம் சேர்த்து நெய்யூற்றி களிம்பு பதத்தில் கிண்டி எடுப்பதாகவும். களிம்பு பதம் என்பது ஒட்டாத பதம். 3 மணி நேரம்.
(6) அடை:
மாவுப் பொருட்களுடன் சில இலைகளைச் சேர்த்து அடுப்பேற்றி கொஞ்சங் கொஞ்சமாய் நெய் தடவி மாவை அடையாகத் தட்டி வெந்தபின் எடுப்பது. 3 மணி நேரம்.
(7) தூள் (சூரணம்):
ஈரமான மருந்துச் சரக்குகளை உலர்த்தியும், உலர்ந்தவற்றை சுத்தம் செய்தும். வறுக்க வேண்டியவற்றை வறுத்தும், மற்றவற்றை அப்படியே தனித்தனியாக இடித்துச் சலித்து எடுக்கக் கிடைப்பது. (சலித்தல் என்பது மெல்லிய வெள்ளை துணியால் மிக நுண்ணிய தூளாகச் சலிப்பது. இது வஸ்திரகாயம் எனப்படும்.) 3 நாட்கள்.
(8) பிட்டு:
தூளை சுத்தி செய்வது போல் மருந்து சரக்குகளைப் பொடியாக்கி பால் அல்லது தண்ணீரை பயன்படுத்தி ஆவியில் அவித்து எடுப்பது. 3 மாதம்.
(9) வடகம்:
மருந்து சரக்குகளைத் தூளாக்கி நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தோடு சேர்த்து அதை உரலில் இட்டு இடித்துச் சிறிதாக உருட்டி எடுப்பதாகும். 3 மாதம்.
(10) வெண்ணெய்:
மருந்து சரக்குகளைத் தூளாக்கி இரும்பு கரண்டியில் தூளின் எடைக்கு இருமடங்கு பசுவின் நெய் சேர்த்து அடுப்பிலேற்றி நெய் உருகிக் கலந்து உடன் தண்ணீர் உள்ள மண் சட்டியில் ஊற்றி மத்தால் கடைய கிடைப்பது. 3 மாதம்.
(11) மணப்பாகு:
சரக்குகள், வேர்கள், பூக்கள், பழங்கள், போன்றவற்றை குடிநீர் அல்லது சாறு பிழிந்து அதனுள் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து மணம் வரும் வரை காய்ச்சி பின் இறக்கி வைத்து ஆறிய பின் எடுப்பது. 6 மாதம்.
(12) நெய்:
இலைச்சாறு, கிழங்குச்சாறு, கற்கம், குடிநீர் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ சேர்த்து பசுவின் நெய்யோடு கலந்து அடுப்பேற்றி காய்ச்ச கிடைப்பது. 6 மாதம்.
(13) இரசாயணம்:
மருந்து சரக்குகளைத் தூளாக்கி அவற்றோடு சர்க்கரை மற்றும் நெய் சமனெடை சேர்த்து குழம்பு நிலையில் எடுப்பது. 6 மாதம்.
(14) இளகம் (லேகியம்):
மருத்துவக் குடிநீர் அல்லது மூலிகைச் சாறோடு சர்க்கரை சேர்த்து அடுப்பேற்றி சிறுதீயாகச் சுண்ட வைத்து மணம் வரும் நேரத்தில் தேன் அல்லது நெய் போன்றவற்றை கலந்து கிளறக் கிடைப்பது. 6 மாதம்.
(15) நெய் (கிருதம்):
விதை, பட்டை போன்றவற்றை நன்றாக உலர்த்தி பின்பு செக்கிலிட்டு ஆட்டிப் பெறப்படுவது. இது தைலம் எனவும் அழைக்கப்படும். ஒரு வருடம்.
(16) மாத்திரை:
சிறு சரக்குகளைச் சேர்த்து மூலிகை இலைச்சாறு அல்லது குடிநீர் கொண்டு அரைத்துப் பல அளவுகளில் உருட்டக் கிடைப்பது. ஒரு வருடம்.
(17) கடுகு:
மருந்துச் சரக்குகளை நெய் முதலியவற்றுடன் காய்ச்சி திரண்டு வரும்போது கடுகு பதத்தில் எடுக்கப்படுவது ஆகும். (கடுகு பதம் என்பது பாகுக்கு அடுத்த இறுகக்கூடிய நிலையாகும்.). ஒரு வருடம்.
(18) பக்குவம் (பதம்):
மருந்துகளைப் பக்கவப்படுத்த பொடித்தல், ஊற வைத்தல் போன்ற செயல்களைச் செய்வது. ஒரு வருடம்.
(19) தேனூறல்:
இஞ்சி, நெல்லிக்காய். கடுக்காய் முதலியவற்றை நன்றாகக் கழுவி ஊசியால் பல துளையிட்டு தேன் அல்லது சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுப்பது. ஒரு வருடம்.
(20) தீநீர்:
சரக்குகளைத் தண்ணீர் உள்ள சட்டியிலிட்டு அடுப்பிலிருந்து இறக்குவதாகும். ஒரு வருடம்.
(21) மெழுகு:
சரக்குகளுடன் சாறு அல்லது நெய் போன்றவற்றை சேர்த்து அரைத்து மெழுகு பதத்தில் காய்ச்சி எடுப்பதாகும். 5 வருடங்கள்.
(22) குழம்பு:
சாறுகள், சர்க்கரை, மருந்துப் பொடிகள் முதலியவற்றை காய்ச்சி குழகுழப்பான பக்குவத்தில் எடுப்பது. இதில் இரசாயணம் போல நெய் சேராது. 5 ஆண்டுகள்.
(23) பதங்கம்:
பாதரசம் அல்லது இரசம் கலந்த பொருட்களைச் செங்கல் தூள், உப்பு ஆகியவற்றிற்கு இடையில் வைத்துச் சீலைமண் செய்து மேல் சட்டியில் படிந்து இருப்பதை வழித்தெடுப்பது பதங்கம் ஆகும். 10 வருடங்கள்.
(24) செந்தூரம்:
உலோகம், பாடாணம் முதலியவற்றை இலைச்சாறு, புகைநீர், செயநீர் முதலியவற்றைக் கொண்டு புடம் போடக் கிடைப்பது. இது செந்நிறமாக இருக்கும்.75 வருடங்கள்.
(25) பற்பம் (பஸ்பம்):
உலோகம், பாடாணம் முதலியவற்றை இலைச்சாறு, புகைநீர், செயநீர் முதலியவற்றைக் கொண்டு புடம்போட்டு நீற்றக் கிடைப்பது. இது வெண்ணிறமாக இருக்கும். 100 வருடங்கள்.
(26) கட்டு:
பாடாணங்களைச் சுருக்குக் கொடுத்துப் பற்பம், செந்தூரம் போன்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து மாத்துரையாகச் செய்வது. 100 வருடங்கள்.
(27) உருக்கு:
பாடாணம், உலோகம், இவற்றுடன் நட்பு, பகை பொருட்களைக் கூட்டி எரித்து எடுப்பது. 100 வருடங்கள்.
(28) களங்கு:
ரசம், பாடாணம் போன்ற மருந்துகளை மூலிகை, செயநீர், புகைநீர் முதலியவற்றால் சுருக்கு கொடுத்து, புடமிட்டு மணியாக்கி தங்கம், நாகம் சேர்த்து கூட்டி எடுப்பது. 100 வருடங்கள்.
(29) சுண்ணம்:
ரசம், பாடாணம், உலோகம் இவைகளை தனியாகவோ, கலந்தோ மூலிகை, செயநீர், புகைநீர் இவற்றில் அரைத்துச் சீலைமண் செய்து நெருப்பால் ஊதி எடுப்பது. 500 வருடங்கள்.
(30) கற்பம்:
மூலிகை, உலோகம், உபரசங்கள் போன்ற பலவற்றை பக்குவத்துடன் செய்வது. 1000 வருடங்களுக்கும் மேல்.
(31) சத்து:
காந்தம், இரும்புத்தூள் முதலியவற்றுடன் பல பாடாணங்களை சேர்த்து அரைத்து ஊதி ரசம், கந்தகம், தங்கம் சேர்த்து எரித்து எடுப்பது. 1000 வருடங்களுக்கு மேல்.
(32) குருகுளிகை:
வாலை இரசத்தை சில சரக்குகளால் கட்டி மணியால் செய்து எடுத்துக் கொள்வது. 1000 வருடங்களுக்கு மேல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக