திங்கள், 29 அக்டோபர், 2018

சுத்தி முறைகள் (மூலிகைகள் - பொது சுத்தி)

வேர் வகை சுத்தி:

செடி, கொடி, புல், பூண்டு, மரம், விருட்சம் முதலிய சகல தாவரங்களின் வேர் வகைகளையும் ஆற்று நீரில் கழுவி எடுத்துக் கொள்ள சுத்தியாகும்.

கிழங்கு வகை சுத்தி:

சகல விதமான கிழங்கு வகைகளையும் நன்றாக கழுவி மேல் தோலையும், உள் நரம்பையும் நீக்கி துடைத்துக் கொள்ளவும்.

பட்டை வகை சுத்தி:

சுத்தமான துணியால் தூசி, மண் முதலியவற்றை துடைத்து சிறிய கத்தியால் மேல்தோலை மிருதுவாக சீவியெடுத்து நீக்கிவிட வேண்டும்.

இலை வகை சுத்தி:

இவற்றை தண்ணீரில் கழுவாமல் சுததமான துணியால் துடைத்து பழுப்பு, அழுகல். பூச்சிக்கடி போன்றவற்றை நீக்க வேண்டும்.

புட்ப வகை சுத்தி:

காம்பு, புல்லி இதழ். மகரந்தம் முதலியவற்றை நீக்கி இதழாக எடுத்துக் கொளளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக