நாடிகளின் குணம் :
வாத குணம்:
பித்த குணம்:
சிலேத்தும குணம்:
வாத குணம்:
காணப்பா வாதமீறில் கால்கைகள்பொருந்தி நோகும்
பூணப்பா குடல்புரட்டும் மலஞ்சலம் பொருமிக்கட்டும்
ஊணப்பா குளிருங்காய்ச்ச லுடம்பெல்லாம் குத்துவாய்வு
வீணப்பா குதமிறுகும் வேர்வையும் வேர்க்குந்தானே.
பித்த குணம்:
தானென்ற பித்தமீறில் சடலமெல்லாங் காந்தல்காணு
மூனென்ற வாந்திவாய்நீ ரூரியேவொழுகுங்சாவான்
வானென்ற மட்டில்வேகும் மண்டையில் குத்துண்டாகும்
தேனென்ற விக்கல்மூர்ச்சை செவியடைப்புண்டாகும்பாரே.
சிலேத்தும குணம்:
பாரப்பா அய்யமீறில் பாசத்தினனல்தான்மீறும்
நேரப்பாயிளைக்குந்தேகம் நெஞ்சுடன்விலாவுநோவாந்
தாரப்பாசுரமுங்காயும் சாதமுமொருக்குநாளில்
ஓரப்பாரெத்தங்கக்கு முடல்வற்றுஞ்சுரம்பேறாமே.
நாடிகள்
|
நாடி நடை
|
உண்டாகும் நோய்கள்
|
வாதத்தில் வாதம்
|
வாத நாடி அதிகமாக நடக்கும்
|
உடல் நொந்து வலியோடு நடுங்கும்
|
வாதத்தில் பித்தம்
|
பாரஞ்சுமப்பது போல்நடக்கும்
|
வாய் குளறும், பேச்சு தடுமாறும், நடைதளரும், கால்கள் நடுங்கும்
|
வாதத்தில் சிலேத்துமம்
|
முறிந்த அரணை வால் துடிப்பது போல் நடக்கும்
|
உடல் வீங்கி வலிக்கும், தலைவலி ஏற்படும், மனம் தடுமாறும், உணவைத் தள்ளும்
|
பித்தத்தில் வாதம்
|
வீணை அடிப்பது போல் நடக்கும்
|
கழுத்து, பிடரி, கை, கால்களில் குத்தல், வலி ஏற்படும்.
|
பித்தத்தில் பித்தம்
|
பித்த நாடி அதிகமாக நடக்கும்
|
தலை சுற்றல், இளைப்பு, களைப்புடன் உடல் வெளுத்து வீங்கும்
|
பித்தத்தில் சிலேத்துமம்
|
பிள்ளை தொட்டிலில் ஆடுவது போல் நடக்கும்
|
வாய் பேச முடியாமல் குளறும், தலை சுற்றல், வயிறு வலி, பிதற்றல், வாயில் நீர் ஒழுகும்
|
சிலேத்துமத்தில் வாதம்
|
புணர்ச்சி போல நடக்கும்
|
நரம்புகள் வலித்து இழுக்கும், பிடரியில் வலிக்கும், கண்கள் மேலே ஏறும், பேச்சு தடுமாறும்
|
சிலேத்துமத்தில் பித்தம்
|
வண்டி சக்கரம்போல் நடக்கும்
|
உணவு கசக்கும், நாவில் கசப்பு மிகும், பேச்சு தடுமாறும்
|
சிலேத்துமத்தில் சிலேத்துமம்
|
சிலேத்தும நாடி அதிகமாக நடக்கும்
| கண்களைச் சுற்றி வட்டமேற்படும், கால் வழியே குளிர் ஏறி விரைவில் உடல் குளிரும். பின் சில்லிட்டு நடுங்கச் செய்து உயிர் பிரியும். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக