வியாழன், 25 அக்டோபர், 2018

நாடி சாஸ்திரம் - தொடர்ச்சி..

நாடிகளின் குணம் :

வாத குணம்:



காணப்பா வாதமீறில் கால்கைகள்பொருந்தி நோகும்
பூணப்பா குடல்புரட்டும் மலஞ்சலம் பொருமிக்கட்டும்
ஊணப்பா குளிருங்காய்ச்ச லுடம்பெல்லாம் குத்துவாய்வு
வீணப்பா குதமிறுகும் வேர்வையும் வேர்க்குந்தானே.

பித்த குணம்:


தானென்ற பித்தமீறில் சடலமெல்லாங் காந்தல்காணு
மூனென்ற வாந்திவாய்நீ ரூரியேவொழுகுங்சாவான்
வானென்ற மட்டில்வேகும் மண்டையில் குத்துண்டாகும்
தேனென்ற விக்கல்மூர்ச்சை செவியடைப்புண்டாகும்பாரே.

சிலேத்தும குணம்:


பாரப்பா அய்யமீறில் பாசத்தினனல்தான்மீறும்
நேரப்பாயிளைக்குந்தேகம் நெஞ்சுடன்விலாவுநோவாந்
தாரப்பாசுரமுங்காயும் சாதமுமொருக்குநாளில்
ஓரப்பாரெத்தங்கக்கு முடல்வற்றுஞ்சுரம்பேறாமே.



நாடிகள்
நாடி நடை 
உண்டாகும் நோய்கள்
வாதத்தில் வாதம் 
வாத நாடி அதிகமாக நடக்கும்
உடல் நொந்து வலியோடு நடுங்கும் 
வாதத்தில் பித்தம்
பாரஞ்சுமப்பது போல்நடக்கும்
வாய் குளறும், பேச்சு தடுமாறும், நடைதளரும், கால்கள் நடுங்கும் 
வாதத்தில் சிலேத்துமம்
முறிந்த அரணை வால் துடிப்பது போல் நடக்கும் 
உடல் வீங்கி வலிக்கும், தலைவலி ஏற்படும், மனம் தடுமாறும், உணவைத் தள்ளும் 
பித்தத்தில் வாதம்

வீணை அடிப்பது போல் நடக்கும்
கழுத்து, பிடரி, கை, கால்களில் குத்தல், வலி ஏற்படும். 
பித்தத்தில் பித்தம் 
பித்த நாடி அதிகமாக நடக்கும் 
தலை சுற்றல், இளைப்பு, களைப்புடன் உடல் வெளுத்து வீங்கும் 
பித்தத்தில் சிலேத்துமம்
பிள்ளை தொட்டிலில் ஆடுவது போல் நடக்கும் 
வாய் பேச முடியாமல் குளறும், தலை சுற்றல், வயிறு வலி, பிதற்றல், வாயில் நீர் ஒழுகும்
சிலேத்துமத்தில் வாதம்
புணர்ச்சி போல நடக்கும்
நரம்புகள் வலித்து இழுக்கும், பிடரியில் வலிக்கும், கண்கள் மேலே ஏறும், பேச்சு தடுமாறும் 
சிலேத்துமத்தில் பித்தம்
வண்டி சக்கரம்போல் நடக்கும் 
உணவு கசக்கும், நாவில் கசப்பு மிகும், பேச்சு தடுமாறும் 
சிலேத்துமத்தில் சிலேத்துமம்
சிலேத்தும நாடி அதிகமாக நடக்கும்
கண்களைச் சுற்றி வட்டமேற்படும், கால் வழியே குளிர் ஏறி விரைவில் உடல் குளிரும். பின் சில்லிட்டு நடுங்கச் செய்து உயிர் பிரியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக