திங்கள், 29 அக்டோபர், 2018

சுத்தி முறைகள் (நீர் வகை சுத்தி)

1) பனிநீர் - மெல்லிய சலவை செய்த பருத்தித் துணியை சுத்த நீரில் கசக்கி பிழிந்து தூசுபாடமல் உலர்த்தி, இதனை நெற்பயிரின் மீதோ அல்லது அரும்புல்லின் மீதோ இரவில் விரித்து வைத்து காலை சூரிய உதயத்திற்கு முன் எடுத்து பாத்திரத்தில் பிழிந்து வடிகட்டி எடுக்கவும்.

2) ஆலங்கட்டி - இதை மண்பாத்திரத்தில் விட்டு சிறிது கரிமஞ்சள் தூள் சேர்த்து 7 நாள் சூரிய புடமிட்டு சீலையில் வடிகட்டி எடுக்கவும்.

3) வெந்நீர் - கரி நெருப்பில் தக்கபடி காய்ந்த நீரை 3 முறை கரிய நிற சீலையால் வடிகட்டி எடுக்கவும்.

4) சுத்த நீர் - இதனே 7 மடிப்பாக மடித்த முரட்டு துணியால் 7 முறை வடிகட்டவும்.

5) கழுநீர் - அரிசியை 2வது முறை கழுவும் நீரை ஒரு சாமம் தெளிய வைத்து எடுக்கவும்.

6) காடிநீர் - காடியுள்ள மண்பாத்திரத்தை 3 நாள் கடும் வெய்யிலில் வைத்து 4வது நாள் வண்டலை நீக்கி வடிகட்டி கொள்ளவும்.

7) இளநீர் - இதனை கத்தியால் சீவி நீரை உடனே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

8) கோ மூத்திரம் - இதனை மண்பாத்திரத்திலிட்டு மத்தினால் அரை நாழிகை கடைந்து உண்டாகும் நுரையை நீக்கி சீலையில் வடிகட்டவும். இதேபோல் ஏழுமுறை செய்யவும். (இம்முறையில் வெள்ளாடு, குதிரை, கழுதை, யானை, எருது போன்ற விலங்குகளின் மூத்திரத்தையும் சுத்தம் செய்யவும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக