செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - குடல் பிடிப்பு நோய்

            இந்நோய் வயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டு வலிக்கும் நோய். மேலும் இதில் வயிற்று இரைச்சல், வயிற்றுவலி, வயிறு புரட்டல், மலக்கட்டு, பெருமூச்சு, சுரம் எனும் குணங்களை உண்டாக்கி வயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டு நிமிர முடியாதவாறு வலிக்கும். இது அட்டிலம், பிரதி அட்டிலம், துநி, பிரதிதுநி என 4 வகைப்படும்.

குடல் பிடிப்பு நோய் உருவாகக் காரணங்கள் :
  1. அதிக உழைப்பு
  2. விரைவாக ஓடுதல்
  3. வயிற்றில் அடிபடல்
  4. அதிக பட்டினி மற்றும் அதிக உணவு
  5. எளிதில் செரிக்காத உணவுகளை உண்ணுதல்

குடல் பிடிப்பு நோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோயில் ஆரம்பத்தில் வயிறு இரைந்துபோகும். பின் வயிறு ஊதி, வயிற்றில் தாங்க முடியாத வலி, குடல் புரட்டல், மூச்சுவிட இயலாமை, வயிற்றை இழுத்துப் பிடித்து நிமிர இயலாமல் செய்தல், வாந்தி, ஏப்பம், சுரம், மலம் தடைபடுதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக