செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - கடுப்புக்கழிச்சல் / சீதபேதி

            வயிறு கடுத்து அடிக்கடி சிறிதாகவோ அல்லது கடுப்பு அதிகமின்றி அதிகமாகவோ சீதமும் (சளியும்), இரத்தமும் கலந்து கழியும்.

சீதபேதி உண்டாகக் காரணங்கள் :
  1. அதிக காரம், புளிப்பு சேர்ந்த உணவுகளை உண்ணல்
  2. எளிதில் செரிக்காத உணவை உண்ணல்
  3. கடும் வெயிலில் அலைதல்
  4. அதிக குளிரில் அலைதல்
  5. இரவில் கண் விழித்தல்

சீதபேதியின் பொதுக் குணங்கள் :
இந்நோயில் தலைவலி, வாந்தி, குமட்டல், வயிறு கடுத்து இரைந்து புரட்டல் எனும் குணங்கள் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக