வியாழன், 15 அக்டோபர், 2020

ரோக நிதானம் - பக்கவாதம் (பாரிச வாயு)

            இது உடலின் ஒரு பக்கத்தை உணர்ச்சியற்று போகச் செய்யும் அல்லது கை, கால், விரல்கள், நாக்கு, வாய், கண் முதலியவற்றை கேடடையச் செய்யும் நோயாகும்.

பக்கவாத நோய் வரக் காரணங்கள் :
இது வாதத்தை பெருக்கும் உணவுகளை அதிகமாக உண்ணுதல், கள் சாராயம் முதலியவற்றை அதிகமாக குடித்தல், மேக நோய் மற்றும் தமரக நோயின் துணை நோயாக உண்டாகும்.

பக்கவாத நோயின் குணங்கள் :
இந்நோயில் வாதம் மிகுந்து உடலின் ஒருபக்கத்தில் மட்டும் வலிப்பு கண்டு பின் அந்த பக்கம் முழுதும் செயலிழந்து போகும். மேலும் உடல் வியர்த்து வெளுக்கும், உடல் மெலியும், கால்கள் அசைக்க முடியாமலும், கைகள் எதையும் பிடிக்கும் வலிமை இல்லாமலும் போகும், வாய் கோணி உமிழ்நீர் தானாகவே வடியும் எனும் குணங்கள் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக