செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - கல்லீரல் (வலப்பாட்டீரல்) நோய்

            கல்லீரல் தன அளவில் நிற்காமல் பெருத்துக் கொண்டே வந்து தன் இயற்கை தொழிலை இழத்தல் அல்லது சிறுத்துக் கொண்டே வந்து பல நோய்களை உண்டாக்கும் இயல்பைக் கொண்டிருப்பது. இது 3 வகைப்படும்.

கல்லீரல் நோய் வரக் காரணங்கள் :
  1. அதிக உணவு அல்லது உடலுக்கு ஒவ்வாத உணவை உண்ணல்
  2. குழந்தைகளுக்குப் பால் உணவின் மாறுபாட்டால் வருவது
  3. பாலியல் நோய் மற்றும் சுரத்தின் கூட்டால் வருவது
  4. கள், சாராயம் அதிகமாகக் குடித்தல்

கல்லீரல் நோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோயில் வாய் கசத்தல், சுவையின்மை, வாய்நீர் ஊறல், பசியின்மை, பித்த வாந்தி, முகம் சுருங்கி எலும்புகள் எடுத்துக் காட்டல், கைகால் சூம்பல், வயிறு பெருத்தல், அடிக்கடி சுரம், உடல் இளைத்துக் கறுத்தல்.

கல்லீரல் நோயின் வகைகள் :
1) வாத கல்லீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு நிணநீர் குழாய்களின் முடிச்சுகள் கனத்தல்,  உடலில் குருதியின் அளவு குறைந்து வெளுத்தல் எனும் குணங்கள் காணும்.

2) பித்த கல்லீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு பித்தநீர் உடல் முழுதும் கலந்து மஞ்சள் நிறத்தில் காணும்.

3) ஐய கல்லீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு சிறுநீர் அளவில் குறைந்தும், சிவந்தும் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக