செவ்வாய், 30 ஜூன், 2020

சித்த மருத்துவத்தில் பஞ்சபூத கொள்கை (பஞ்சீகரணம்)

        இந்த உலகில் தோன்றியுள்ள சகல ஜீவராசிகளும் பஞ்சபூத கலப்பால் ஆனது. நம் உடலும் இந்தப் பஞ்சபூத கலப்பின் அடிப்படையிலேயே உண்டானது. இந்தப் பஞ்சபூதங்களும் ஒன்றுடன் ஒன்று கலப்பதால் ஸ்தூல, சூட்சும, காரண தேகங்கள் உண்டாகிறது என்றும் கூறுவர். இங்குக் காரணம் என்பது நமது மூச்சினைக் குறிக்கும். இவ்வாறு பஞ்சபூத கலப்பால் மூன்றுவித தேகங்கள் உண்டாவதை பஞ்சீகரணம் என்பர்

1) எலும்பு,  தோல், தசை, மயிர், நாடி நரம்புகள் முதலியவை மண்ணின் தன்மையைகவை.

2) இரத்தம், கொழுப்பு, சீழ், விந்து, சிறுநீர், மூளை போன்றவை நீரின் தன்மையைக் கொண்டவை.

3) சோம்பல், காமம், கோபம், அச்சம், தூக்கம், இறுமாப்பு போன்ற உணர்வுகள் தீயின் தன்மையைக் கொண்டவை.

4) ஓடுதல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் போன்ற உடலின் செயல்கள் காற்றின் தன்மையைக் கொண்டவை.

5) ஆசை, உட்பகை, மோகம், வெறி, வஞ்சனை போன்ற குணங்கள் ஆகாய கூறுகள் என்றும் கூறுவார்.


ஸ்தூல பஞ்சீகரணம் :
  1. மண்ணில் மண் - உடலில் சக்தி குறைந்து அசதி ஏற்படும்.
  2. மண்ணில் நீர் - உடலில் மாமிசம் உருவாகின்றது,
  3. மண்ணில் தீ - சருமமாகிய தோல் உருவாகின்றது,
  4. மண்ணில் வாயு - நரம்புகளும்,
  5. மண்ணில் ஆகாயம் - ரோமமும்,
  6. நீரில் நீர் - சிறுநீரும்,
  7. நீரில் மண் - உமிழ்நீரும்,
  8. நீரில் வாயு - உதிரமும்,
  9. நீரில் தீ - வியர்வையும்,
  10. நீரில் ஆகாயம் - சுக்கிலமும்,
  11. தீயில் தீ - நேத்திர கண்ணும்,
  12. தீயில் ஆகாயம் - செவியும்,
  13. தீயில் வாயு - சரீரமும்,
  14. தீயில் நீர் - வாயும் நாக்கும்,
  15. தீயில் மண் - நாசியும்,
  16. காற்றில் மண் - இருதயமும் பிராணக் காற்றும்,
  17. காற்றில் நீர் - குதமும் அபான வாயுவும்,
  18. காற்றில் காற்று - சர்வ நாதங்களும் வியானனும்,
  19. காற்றில் தீ - கழுத்தும் உதானனும்,
  20. காற்றில் ஆகாயம் - தொப்புளும், சமானனும்,
  21. ஆகாயத்தில் மண் - இருதயமும்,
  22. ஆகாயத்தில் நீர் - நாசியில் பித்தமும்,
  23. ஆகாயத்தில் தீ - மார்பும்,
  24. ஆகாயத்தில் காற்று - கண்டமும்,
  25. ஆகாயத்தில் ஆகாயம் - சிவமும் உருவாகின்றன. 

சூட்சும பஞ்சீகரணம் :
  1. மண்ணில் மண் - குதமும்,
  2. மண்ணில் நீர் - குய்யமும்,
  3. மண்ணில் தீ - கைகளும்,
  4. மண்ணில் காற்று - பாதங்களும்,
  5. மண்ணில் ஆகாயம் - வாக்கும்,
  6. நீரில் ஆகாயம் - சத்தமும்,
  7. நீரில் காற்று - தொடு உணர்வும்,
  8. நீரில் தீ - பார்வையும்,
  9. நீரில் நீர் - சுவையும்,
  10. நீரில் மண் - வாசனையும்,
  11. தீயில் தீ - பசி தீபாக்கினியும்,
  12. தீயில் மண் - தாகமும்,
  13. தீயில் நீர் - தூக்கமும்,
  14. தீயில் காற்று - கொட்டாவியும்,
  15. தீயில் ஆகாயம் - சங்கமமாகிய கலத்தலும்,
  16. வாயுவில் வாயு - ஓட்டமும்,
  17. வாயுவில் நீர் - இருத்தலும்,
  18. வாயுவில் தீ - தத்தித்தத்தலும்,
  19. வாயுவில் மண் - நடத்தலும்,
  20. வாயுவில் ஆகாயம் - படுத்தலும்,
  21. ஆகாயத்தில் மண் - ஆசையும் அகங்காரமும்,
  22. ஆகாயத்தில் நீர் - துவேசமும்,
  23. ஆகாயத்தில் தீ - பயமும்,
  24. ஆகாயத்தில் காற்று - வெட்கமும்,
  25. ஆகாயத்தில் ஆகாயம் - மேகமும் உருவாகின்றன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக